திருவலம் கிராமம் நகர கலாச்சாரத்தில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு கிராமிய மணம் சற்றும் மாறாமல் மிக அழகாக இருந்தது .அந்த சிறிய ஊரின் நடுவில் இருக்கும் அழகிய மாரியம்மன் கோவில் , அந்த ஊர் மக்களுக்கு காவல் நிலையமாகவும், நீதி மன்றமாகவும், பொழுதுபோக்கு அரங்கமாகவும் , இப்படி சகலமாகவும் இருந்தது. ஊரில் எந்த நிகழ்வு என்றாலும் மக்கள் அந்த மாரியம்மன் கோவில் திடலில் ஒன்று கூடி பஞ்சாயத்தில் பிரச்சனையை விவாதிப்பது வழக்கம் , கணவன் மனைவி பிரச்சனை முதல் கம்மாய் பிரச்சனை வரை பல விசயங்களுக்கும் அங்கு தீர்வு ஏற்பட்டிருக்கிறது.
அந்த ஊரில் ஒரு வழக்கம் இருந்தது .யாராவது இருவருக்கிடையே பிரச்சனை என்று பஞ்சாயத்து வரை வரும்போது , பஞ்சாயத்தாரால் முடிவெடுக்க முடியாத தருணங்களில் சம்மந்தப்பட்ட இருவரையும் கோவிலின் உள்ளே அழைத்து சென்று அம்மன் முன்னிலையில் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்ய சொல்வது வழக்கம்.இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்பட்ட போது எல்லாம் பிரச்சினைக்குரியவர்கள் , இதற்கான ஆயதம் செய்யப்படும் முன்பே பலமுறை தவற்றை ஒப்புக்கொண்டு பின்வாங்கி இருக்கிறார்கள் ,யாருக்கும் தெய்வத்தின் முன்பு பொய்சத்தியம் செய்ய துணிவு வந்ததில்லை.
அன்று மாலை கேசவன் தன வீட்டு தோட்டத்தில் உள்ள முருங்கை மரத்தில் ஏறி காய்கள் பறிக்க எத்தனித்தபோது, கிளை முறிந்து அவர் கிழே கிடந்த உறுதியான கல்லில் மீது விழுந்ததில் அவருக்கு கால் எலும்புகள் மிகவும் சேதாரமாகி போனது. எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அவருடைய வலது கால் சற்று ஊனமாகி அவர் காலை விந்தி விந்தி நடக்கும்படியாக ஆகிவிட்டது.
- சே . தரணி குமார்
3 comments:
உங்களுக்கு வருமா?
உங்களின் கேள்வியின் அர்த்தம் எனக்கு புரியவில்லை தயவு செய்து விளக்கவும்
படங்களோடு சிறுகதை. நன்று....!!!
Post a Comment