Thursday 1 October 2009

பிரிவு

ஒரு பட்டுப்போன நட்பின்
வேர்களில் எப்போதும் 
மிச்சமிருக்கும் ஒருசில
நினைவெண்ணும் நீர்த்துளிகள்


நட்பின் மரணம் நன்பர்களின்
மரணத்தை விட சோகமானது என்பது
பிரியும் நேரங்களில்
பலருக்கும் புரிவதில்லை






பழைய நினைவு அலைகளில்
நிற்க முடியாமல் தவிக்கும்


எத்தனையோ இதயங்கள்
மீண்டும் நட்பு துளிர்க்காதா
என்று ஏங்கும்


உண்மையான அன்பு எப்போதும்
பகைமை பராட்டு வதில்லை
அவை தற்செயலாய் சூழும்   மேகம் போல
குறுகிய இடைவேளைகளில்
அனைத்தும் மன்னிக்கப்படும்








நீளும் மௌனங்கள்
பாலை நிலத்து பகல்கள்
சுட்டெரிக்கும் நினைவுகளால்
மனம் வெதும்பும்


மறப்பதும் மன்னிப்பதும் தான்
கால சூழற்சியை இன்னும்
துரிதப்படுத்துகின்றன


இதயங்களின் பிரிவு
அணுப் பிளவின் தாக்கத்தைவிட
அதிகம் பாதிக்கிறது









சிலர் மட்டும்
பயணித்த சிறகுகளை
அடியோடு மறந்துவிடுகின்றனர்


பலர் இன்னும்
நீளும் இரவுகளின்
நீளம் குறையாதா
எண்ணும் ஏக்கத்தோடு


கால சக்கரத்தினை
கண் கொட்டாமல் பார்க்கின்றனர்.


- சே. தரணி குமார்

2 comments:

Rekha raghavan said...

//ஒரு பட்டுப்போன நட்பின்

வேர்களில் எப்போதும்

மிச்சமிருக்கும் ஒருசில

நினைவெண்ணும் நீர்த்துளிகள்//

அருமையான வரிகள். நல்ல கவிதை. அமைப்பு ஜோர்.

// பராட்டு வதில்லை //
திருத்தவும்.

ரேகா ராகவன்.
http://www.rekharaghavan.blogspot.com/

அன்புடன் நான் said...

நல்லாயிருக்கு.

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails