Saturday 3 October 2009

ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் .......

சிறியதும் பெரியதுமாய்
எத்துணை எத்துணை
இகழ்ச்சிகள்? புறக்கணிப்புகள்? அவமானங்கள்?
இன்ன பிற யாவையுமே
ஏன் என்னை மட்டுமே நோக்கி
வரிசையாய் படையெடுத்து வருகின்றன?




என்
விதியின் வரிகளில் அதிகம்
விரிசல்கள் காணப்படுகின்றனவா?
கடவுளின் அதீத கோபத்தின்
காரணமாகவா?
சுற்றமும் நட்பும்  என்னை
சுமையாக நினைக்கின்றனவா?
அலை அலையாய் என்னுள்
ஆயிரம் கேள்விகள்




என் ஒவ்வுறு பிடிமானமும்
எத்துணை சுலபமாய் நழுவி விடுகிறது?
வறண்ட பாலையாய் வாழ்க்கை
திரும்பும் திசையெங்கும் திணறல்கள்
என்னை கண்டு எனக்கே பாவமாக படுகிறது
சூழ்நிலைகள் என்னை
சூறாவளியாய்   தாக்குகிறது




மௌனமாய் என் மனம்
அழுதுகொண்டே இருக்கிறது
ஆற்றுவதும் தேற்றுவதும்
அரிதான காரியமாகிவிட்டது
எனக்கென்று என்னிடம்
எதுவுமே இல்லை
தாமரை  இலை தண்ணீராய்
எனக்கு உலகம்




என் நட்புகளுக்கு
எனக்கு பிடித்ததை விட
எனக்கு பிடிக்காததையே 
அதிகம் பிடித்திருக்கிறது
சறுக்கல்கள் எங்கு ஆரம்பம் என்று
சற்றும் புரியவில்லை




சிக்கல் நிறைந்த நூல்கண்டாக மனம்
கருணையும் அன்பும் என் என்னிடம் மட்டும்
காண்பிக்கபடுவதே இல்லை?
நான் என்ன
அன்பிற்கு அப்பாற்பட்டவனா?
மரக்கட்டையாய் என்னை சமூகம்
மருதலிக்கிறதே




என் சுயநலம்
எவரையும் காயபடுத்தியது இல்லை
மற்றவர்களின் பொதுநலம் தான்
என்னை பலமுறை காயப்படுத்தி இருக்கிறது
இனியாவது இந்த உலகம்
எனக்காக செவி சாய்க்குமா?
எனக்கு மட்டுமே  இது விடை தெரியாத கேள்வி




கரையும் மெழுகாய் கணபொழுதுகள்
முழுமையாய் இருள் சூழும் முன்பே
கண்டெடுக்க முடியுமா
நான் தவறவிட்ட மனதை?


    
-சே. தரணி குமார்



3 comments:

Unknown said...

உங்க கவிதை ஓவர் negative வாக இருக்கு.

கொஞ்சமாவது positive வாக யோசியுங்களேன்.

நன்றி

அன்புடன் நான் said...

என் சுயநலம்
எவரையும் காயபடுத்தியது இல்லை
மற்றவர்களின் பொதுநலம் தான்
என்னை பலமுறை காயப்படுத்தி இருக்கிறது
இனியாவது இந்த உலகம்
எனக்காக செவி சாய்க்குமா?
எனக்கு மட்டுமே இது விடை தெரியாத கேள்வி//

பலருக்கும் பொருந்து வரிகள். நல்லாயிருக்கு.

யாழிசை said...

nandri ,thiru karunakarasu.

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails